|
எங்க காடி அந்த ரோடுல நேரே போயி வளஞ்சு திரும்பி எதித்த பக்கத்தில வரிசையா இருந்த ஒரு (கிட்டங்கி) வீட்டுக்கு முன்னால நின்னுச்சு. அம்மாடி வந்தாச்சு! ' இந்த வீடா ?'ன்னு கேட்டேன், ஆமான்னாங்க அம்மான். வரிசையா ஏழெட்டு ! எல்லா கிட்டங்கியும் ஒரே மாதிரி இருந்துச்சு! 'ஓ இங்கதான் அப்பச்சி இருக்காங்களா! இப்பவே ஓடிபோயி அப்பச்சிய பாக்கணும் சந்தோஷமா இருந்துச்சு !
அங்க அந்த வீட்டுக்கு வெளியில நெறைய்யப்பேரு நின்னுகிட்டு இருந்தாங்க! அதை பாத்த ஆத்தா 'என்னப்பச்சி இது இவ்வளவு பேரு நிக்கிறாக என்னன்னு தெரியலியே'ன்னு பதறிபோயி கேட்டுகிட்டு இருக்கும் போது எங்களை பாத்த அங்கருந்த வங்க 'இந்தா வந்துட்டாங்கன்னு சொல்லிகிட்டே காடிக்கு பக்கத்துல வேகமா வந்தாங்க. நானும் ஆத்தாவும் இறங்குவதற்குள் அவசரமா முதலில் காடியை விட்டிறங்கிய அண்ணன் பின் பக்கமாக வந்து காடி கதவை திறந்துவிட்டார்கள். அங்க வெளியில உள்ளுக்குள்ள இருந்தவங்க கிட்டேயும் எங்களை நோக்கி வந்துகிட்டு இருந்தவங்க கிட்டேயும் ஒரே பதட்டம்.
ஆத்தாவை பாத்தேன் இந்த மாதிரி ஆத்தா முகத்தை இதுக்கு முன்னாடி நா பாத்ததே இல்லை பாவமா இருந்துச்சு ஏன் ? எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கும் போதும் , அந்த சூழ் நிலையும் எல்லாம சேர்ந்து என்னவோ ரெம்ப பயமா இருந்துச்சு அண்ணனும் மற்றவர்களும் எங்கள் இருவரையும் உள்ளே கூட்டிச் செல்ல அங்கிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று எங்களுக்கு வழி விட எல்லாரும் ஏன் இப்படி பேசாமயிருக்காங்க "எங்கே அப்பச்சி?" நான் கூட வருகிறேனா இல்லையான்னு கூடப் பார்க்கலை ஆத்தா , வேகமாக உள்ளே போ( ஓடி)னார்கள் நான் பின்னாடியே போனேன் முதலில் உள்ள ஹாலைக் கடந்து அடுத்த கட்டுக்குள் கூட்டி போனார்கள் உள்ளே நுழையவே முடியாமல் சரியான கூட்டம்! எல்லாரும் விலகிக் கொண்டு ஆத்தாவுக்கு இடம் கொடுத்தாங்க உள்ளே நுழைந்த ஆத்தா .....
" கதறிய கதறல் " (இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது) அங்கே .. என் அப்பச்சி அழகாக அமைதியாக புன்னகை மாறாமல் மல்லாந்து படுத்து மீளாத் தூக்கத்தில் இருந்தார்கள்.
(முதல் நாள் காலையிலேயே பினாங்கிற்கு புறப்பட ஆயத்தமாகி குளிக்க சென்றவர்கள் திடீரென்று ஏற்பட்ட மாரைடைப்பினால் எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்).
" அப்படி அன்று என் கனவுகளை எல்லாம் தன்னோடு எடுத்து சென்ற என் அப்பச்சியை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை".
(முடிந்தது)
|