பதினைந்து வாரங்களாக, கடந்த பதினைந்து வருடங்களின் சில மணித் துளிகளை திரும்ப வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைத்த மாதிரி இருந்தது.
இன்னும் நிறைய சம்பவங்களும், மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
லேனா தமிழ்வாணன், சுபா, தேவிபாலா, அரஸ் போன்ற நீங்கள் அறிந்தவர்களும், நீங்கள் அறியாத, அதே சமயம் எனக்குள் எழுதுமளவு சுவாரஸ்யம் ஏற்படுத்தி விட்டுப் போனவர்களும் பசேலென்று மனசில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தவிர்க்க இயலாமல் எனக்குக் கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது.
தொடரை இதுவரை மவுனமாய் மனசுக்குள் ரசித்தவர்கள் மற்றும் பின்னூட்டமிட்டும், தங்கள் வலைப்பதிவில் குறிப்பிட்டும் பாராட்டிய சந்திரவதனா, ராஜ்குமார், பாலா, சுரேஷ் குமார் ஆகியோருக்கும் என் நன்றிகள்.
மீண்டும் நிறைய மனிதர்களை அழைத்துக் கொண்டு வரும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக இத் தொடரிலிருந்து விடை பெறுகிறேன்.
பல பிரமுகங்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு நீங்கள் எதிர்கொண்ட விதம், இப்படி சுவாரஸ்யமாகச் சென்ற இந்தத் தொடர், இப்படி திடீரென நிறுத்தியதில் எனக்கு வருத்தமே.அதிகம் எழுதாமல் சிறு சிறு பத்திகளாகத் தான் இதனை எழுதி வந்தீர்கள் இல்லையா? இருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கக்கூடும்....:-(
இந்தத் தொடரில் நான் இன்னமும் சிலாகிக்கும் ஒரு விசயம், நடை!
ஸ்பீட் கதையை ராஜேஷ் குமார் இன்ஸ்பெக்டர் விவேக்கை முன்னிறுத்தி மாத நாவல் ஒன்று எழுதியதாக எனது எண்ணம். ஆனால் அது நீங்கள் எழுதியதாக இப்போது கேள்விப் படுகிறேன். உண்மையா? ராகவன்
ஸ்பீட் படம் எப்போது வந்ததென்று நினைவில்லை. என் கதை, கார் ரேஸ் பற்றியது. 1988-ல் பிரசுரமானது. ஸ்பீடாமீட்டரில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதாக இக் கதையிலும் எழுதப்பட்டது. அது தற்செயல். [ என்றால் யாரும் நம்பவா போகிறார்கள் :-) ]
ஒரே மூச்சில் படிக்க ஆர்வமூட்டும் எழுத்துகள். நிறைய இடங்களில் உணர்ச்சி வசப்பட வைத்து கண்களில் குபுக் என கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க வைத்தது. படித்து முடித்ததும் மறுபடியும் உங்கள் இந்த தொடரை எப்பொழுது பார்ப்போம் என ஒரு எதிர்பார்ப்பு. அதுவரை ஒரு சின்ன சோகம் இருக்கும் என மனது சொல்கிறது. தொடருங்கள். -அன்புடன் இக்பால் அண்ணா.
இத்தொடருக்கும், 3D கதைகளுக்கும் பின்னூட்டமளித்துக் கருத்து்ச சொன்ன அனைவருக்கும் ரொம்ப நன்றி என்று பதில் பின்னூட்டம் தருவதை விட, மீண்டும் எழுதுவதே சரி என்று பட்டது.
என்னை எழுதியவர்களின் வடிவம் சொல்ல வந்த பல விஷயங்களை முழுவதுமாய்ச் சொல்ல முடியாமல் சில தளைகளோடு உள்ளது. ஆகவே அதன் தொடர்ச்சியை இன்னொரு வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.
அதன் விளைவே இலக்கியவாதி தொடர்கதை.
இது கதையா என்றால் இல்லை. நிஜமா என்றால் அதுவும் இல்லை. கதை போல எழுதப்படும் கட்டுரை என்றும் சொல்லலாம். போகப் போக இது கட்டுரை போல மாறக் கூடிய அபாயங்களும் நிறையவே உள்ளது. என்னை எழுதியவர்களில் பல நிஜ மனிதர்களை சந்தித்தோம். இதில் கதை மனிதர்கள் மட்டுமே தென்படப் போகிறார்கள். நிஜ மனிதர்களின் சாயல் தெரிந்தால் அது தற்செயல்.
இலக்கியம், இலக்கியவாதி இந்த இரண்டு வார்த்தைகளும் எனக்குள் ஏராளமான சம்பவங்களையும், எண்ணங்களையும் கிளை விரிக்கிறது. அவற்றின் கோர்வையே இத் தொடர்.
அன்பு சத்யா, எனக்கே ஆச்சிரியமா இருக்கு, ஒரே கட்டுரையெ ஒரு மாசத்துக்குள்ளே எப்படி இரண்டு வாட்டிப் படிச்சேன்னு. அப்போ உங்கக் கட்டுரெ நல்ல இருக்குதுன்னுதான் அர்த்தம். ஆன சில இடங்களெ தவிற பொதுவாக இன்னும் கொஞ்சம் ஆழம் குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையெ இன்னும் நல்லா நீங்க எழுதியிருக்க முடியும்னு நான் நினைக்கிறேன்.
ரொம்ப சீக்கிரமாகவே முடிச்சுட்ட உணர்வு. இன்னும் கொஞ்சம் சம்பவங்களை சேர்த்திருக்கலாம். ராஜேஷ்குமார் சொன்ன அறிவுரைகளை எடுத்துக்காட்டோட தந்தா கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும். ஒரே மூச்சில் உட்கார்ந்து படிச்சேன். அதுவே சொல்லிடும் உங்க நடையைப் பற்றி! :)
(You may need to disable your pop-up blocking
software in order to post a comment.)